செய்திகள்
விபத்தில் சிக்கிய கார்.

சாயல்குடி அருகே கார் மீது அரசு பஸ் மோதி விபத்து- 3 வாலிபர்கள் பலி

Published On 2018-10-17 04:51 GMT   |   Update On 2018-10-17 04:51 GMT
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இன்று காலை அரசு பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். #SayalkudiAccident
சாயல்குடி:

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள மாயகுளம் பாரதி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் அருள் (வயது 22). உமயசிங்கம் மகன் உமயபாலா (18), லிங்கம் மகன் விஜயராஜ் (18), ரவி மகன் கிருஷ்ணகுமார் (23), ராமச்சந்திரன் மகன் நவீன் (18), சக்திவேல் மகன் உபயகணேஷ் (20), முருகேசன் மகன் புவனேசுவரன் (16) ஆகிய 7 பேரும் பட்டாசு வாங்குவதற்காக காரில் சிவகாசி சென்றனர்.

அங்கு பட்டாசுகளை வாங்கிவிட்டு இன்று அதிகாலை ஊருக்குப் புறப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள கீழச்செல்வனூர் போலீஸ் நிலையம் அருகே காலை 5 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசு பஸ் அங்கு வந்தது. எதிர்பாராத விதமாக பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்த அருள், உமயபாலா, விஜயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றவர்கள் பலத்த காயமடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கீழச்செல்வனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் இதம்பாடல் கிருஷ்ணனும் (57) விபத்தில் காயம் அடைந்தர். விபத்து குறித்து கீழச்செல்வனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #SayalkudiAccident
Tags:    

Similar News