செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-10-15 18:21 GMT   |   Update On 2018-10-15 18:21 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே கல்லூரி மாணவி வீட்டின் மேற்கூரை சட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர்:

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கூடலையாத்தூரை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மகள் சிவசங்கரி (வயது 22). இவர் கடலூர் வன்னியர் பாளையத்தில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி இருந்து, தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் எம்.ஏ., 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் தனியாக இருந்த அவர், திடீரென மேற்கூரை சட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News