செய்திகள்

காரைக்குடி அருகே மூதாட்டி கொடூர கொலை- முன்விரோதம் காரணமா?

Published On 2018-10-15 10:42 GMT   |   Update On 2018-10-15 10:42 GMT
வீட்டில் இருந்த மூதாட்டி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் உள்ள புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் வைரவன். இவர் காரைக்குடியில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இளஞ்சியம் (வயது 60). இவர்களது மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

வைரவன் தினமும் வேலை முடிந்து வீட்டு இரவு 10 மணிக்கு தான் வீடு திரும்புவார். இதனால் பெரும்பாலான நேரங்களில் இளஞ்சியம் வீட்டில் தனியாகவே இருப்பார்.

இந்த நிலையில் நேற்று இரவு போல வேலை முடிந்து வைரவன் வீடு திரும்பினார். அப்போது வீட்டிக்கு இளஞ்சியம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் இரும்பு கம்யியால் தாக்கப்பட்டிருந்த அடையாளம் இருந்தது.

மனைவி பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த வைரவன் உடனே அழகப்பாபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ் பெக்டர் ஆத்மநாதன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இளஞ்சியத்தின் நகைகள் வீட்டின் பின்புறத்தில் சிதறி கிடந்தன.

இதனால் நகைக்காக கொலை செய்யப்பட்டது போல் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இளஞ்சியம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News