செய்திகள்

ஏற்காடு மலை பாதையில் அழுகிய நிலையில் ஆண் பிணம்- கொலையா? போலீஸ் விசாரணை

Published On 2018-10-14 22:45 IST   |   Update On 2018-10-14 22:45:00 IST
ஏற்காடு மலை பாதையில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

ஏற்காடு செல்லும் மலை பாதையில் 60 அடி பாலம் உள்ளது. இந்த பாலம் அருகே இன்று காலை பொதுமக்கள் சென்றபோது துர்நாற்றம் வீசியது. அந்த பாலத்தில் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. 

இது குறித்து ஏற்காடு போலீசாருக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு சுமார் 40 வயது இருக்கும். ஆனால் இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனைக்குப் பிறகு தான் முழுவிபரங்களும் தெரியவரும்.

Tags:    

Similar News