செய்திகள்
பவானி அருகே வீட்டுக்குள் இறந்து கிடந்தவர் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு
பவானி அருகே வீட்டுக்குள் படுத்திருந்த நிலையில் பிணமாக கிடந்தவர் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானி தொழிலாளர் வீதியை சேர்ந்தவர் பாபு என்கிற சீனிவாசன் (வயது 45).
இவரது மனைவி பெயர் தமிழரசி. சசிகுமார் என்ற மகனும் சுபரஞ்சனி என்ற ஒரு மகளும் உள்ளனர். சீனிவாசன் வீட்டில் அடிக்கடி தகராறு செய்வாராம். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவரிடம் சரியாக பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி வீட்டுக்கு வந்த சீனிவாசன் தனது அறையில் போய் படுத்து தூங்கிவிட்டார். அப்போது அவர் குடித்திருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று 9-ந்தேதி அவரது மகள் சுபரஞ்சனி தந்தை அறைக்கதவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
அங்கு சீனிவாசன் படுத்திருந்த நிலையிலேயே பிணமாக கிடந்தார்.
இது குறித்து பவானி போலீசுககு புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லசும் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
7-ந்தேதி இறந்து கிடந்த சீனிவாசன் 2 நாட்களுக்குப் பிறகே அவரது உடல் மீட்கப்பட்டது.
பவானி போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
பவானி தொழிலாளர் வீதியை சேர்ந்தவர் பாபு என்கிற சீனிவாசன் (வயது 45).
இவரது மனைவி பெயர் தமிழரசி. சசிகுமார் என்ற மகனும் சுபரஞ்சனி என்ற ஒரு மகளும் உள்ளனர். சீனிவாசன் வீட்டில் அடிக்கடி தகராறு செய்வாராம். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவரிடம் சரியாக பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி வீட்டுக்கு வந்த சீனிவாசன் தனது அறையில் போய் படுத்து தூங்கிவிட்டார். அப்போது அவர் குடித்திருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று 9-ந்தேதி அவரது மகள் சுபரஞ்சனி தந்தை அறைக்கதவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
அங்கு சீனிவாசன் படுத்திருந்த நிலையிலேயே பிணமாக கிடந்தார்.
இது குறித்து பவானி போலீசுககு புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லசும் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
7-ந்தேதி இறந்து கிடந்த சீனிவாசன் 2 நாட்களுக்குப் பிறகே அவரது உடல் மீட்கப்பட்டது.
பவானி போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews