செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

Published On 2018-10-09 12:15 GMT   |   Update On 2018-10-09 12:15 GMT
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை கேதாண்டபட்டி இடையே 20 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார்,சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News