செய்திகள்

புதூரில் நர்சு வீட்டில் நகை கொள்ளை

Published On 2018-10-09 11:16 GMT   |   Update On 2018-10-09 11:16 GMT
புதூரில் நர்சு வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை புதூர் ராமலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லதாதேவி (வயது 48). தனியார் மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு முருகன் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவர் மனைவி பணிபுரியும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கணவருக்கு உதவியாக லதாதேவி ஆஸ்பத்திரியில் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பூட்டிக் கிடந்த அவரது வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து 33 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News