செய்திகள்

வலங்கைமான் அருகே வேன் மோதி தொழிலாளி பலி

Published On 2018-10-09 10:34 GMT   |   Update On 2018-10-09 10:34 GMT
வலங்கைமான் அருகே வேன் மோதி தொழிலாளி பலியானார். காயமடைந்த 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் அருகே உள்ள ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமலு (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் லிப்ட் கேட்டு வடுவூர் மேல்பாதியை சேர்ந்த வேணு கோபால் (65). விடையல் கருப்பூரை சேர்ந்த லூர்து சாமி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தனர்.

அவர்கள் ஆண்டாங்கோவில் பெரியார் காலனி அருகே வந்த போது அந்த வழியாக வந்த லோடு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ராமலு உள்பட 3 பேரும் காயமடைந்தனர். ராமலு தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.

இவர்கள் 3 பேரையும் வலங்கைமான் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுகன் மற்றும் போலீசார் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியான ராமலுவுக்கு சங்கரி என்ற மனைவியும், ராமதிலகம் என்ற மகளும் உள்ளனர்.

Tags:    

Similar News