செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

Published On 2018-10-08 16:12 GMT   |   Update On 2018-10-08 16:12 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். #SterliteProtest #CBI
சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல மனுக்கள் தொடரப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 
Tags:    

Similar News