செய்திகள்

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?- தேசிய செயலாளர் சஞ்சய்தத் பேட்டி

Published On 2018-10-08 04:43 GMT   |   Update On 2018-10-08 04:43 GMT
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத் பதிலளித்துள்ளார். #Congress #sanjayDutt
கோபி:

அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய்தத் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மாவட்டம் தோறும் தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு வருகிறோம்.

இக்கட்சியைப் பொறுத்தவரை தொண்டர்கள் தான் மிக முக்கியமானவர்கள். விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறஉள்ளதால், பூத் கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த உள்ளோம்.


தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு, நான் பதில் சொல்ல தமிழகம் வரவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி தான் இதுகுறித்து முடிவு செய்வார்கள்.

மத்திய அரசும், தமிழக அரசும் மக்களை ஏமாற்றி வருகிறது. இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Congress #sanjayDutt
Tags:    

Similar News