செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை- தொலைக்காட்சி பெட்டிகள் சேதம்

Published On 2018-10-06 04:19 GMT   |   Update On 2018-10-06 04:19 GMT
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மேட்டூர், வீரகனூர், கரியகோவில், ஓமலூர் உள்பட பல பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மேட்டூர், வீரகனூர், கரியகோவில், ஓமலூர் உள்பட பல பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

இந்த மழையால் மேட்டூர் மசூதி தெருவில் 10-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட செட்-டாப் பாக்ஸ்களும் சேதம் அடைந்தது.

மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. ஏற்காடு மலைப்பாதையில் பனி மற்றும் மேகம் சூழ்ந்த படி இருந்ததால் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 12.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வீரகனூர், கரிய கோவில், ஓமலூரில் 11, ஏற்காடு 8.6, கெங்கவல்லி 8.3, தம்மம்பட்டி, ஆத்தூரில் 6.4,சேலம் 6.2, பெத்தநாயக்கன் பாளையம் 4, ஆனைமடுவு 3, வாழப்பாடி 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 90.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
Tags:    

Similar News