செய்திகள்

படிக்குமாறு பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவன் வீட்டில் இருந்து ஓட்டம்

Published On 2018-10-01 15:19 GMT   |   Update On 2018-10-01 15:19 GMT
செய்யாறு அருகே சரிவர படிக்காத மாணவனை பெற்றோர் கண்டித்ததால் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தான். இது குறித்து அவனது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

செய்யாறு:

செய்யாறு அடுத்த பிரம்மதேசம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்த 17 வயது மாணவன், வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்துவருகிறார். இந்த மாணவன் சரிவர படிக்காததால், பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதையடுத்து, கோபித்துக் கொண்டு மாணவன் வீட்டில் இருந்து கடந்த 27-ந் தேதி வெளியேறினார். எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது இதுவரை தெரியவில்லை.

இதுபற்றி, பிரம்மதேசம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து மாணவனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News