செய்திகள்

குடியாத்தம் அருகே கடித்த வி‌ஷப்பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்த பெண்

Published On 2018-10-01 16:58 IST   |   Update On 2018-10-01 16:58:00 IST
குடியாத்தம் அருகே தன்னை கடித்த கண்ணாடி விரியன் பாம்புடன் பெண் ஆஸ்பத்திரிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த பல்லலக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி புனிதா (வயது 39). இவர், இன்று காலை சமையல் செய்வதற்காக தனது வீட்டு முற்றத்தில் உள்ள அடுப்பில் தீ மூட்டினார்.

அடுப்பில் வைப்பதற்காக அருகில் கிடந்த தென்னை மட்டைகளை எடுத்தார். அப்போது, அதில் இருந்த ஒரு கண்ணாடி விரியன் குட்டிப்பாம்பு புனிதாவின் கையில் கடித்தது. அந்த பாம்பை புனிதா அடித்துக் கொன்றுவிட்டார்.

பிறகு, கொன்ற பாம்பை எடுத்துக் கொண்டு புனிதா குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். டாக்டர்களிடம் இந்த பாம்பு தான் என்னை கடித்து விட்டு என்று தூக்கி காண்பித்தார்.

பாம்பை பார்த்தவுடன் டாக்டர்கள், நோயாளிகள் திடுக்கிட்டனர். உடனடியாக புனிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் நலமாக உள்ளார். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News