செய்திகள்
தடுப்புச்சுவரில் மோதல்: பைக்கில் சென்ற கட்டிட தொழிலாளி பலி
சாத்தூர் அருகே பைக் விபத்தில் பலத்த காயம் அடைந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சாத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த முருகன் மகன் சண்முகசுந்தரம் (35). இவர் சிவகாசியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சாத்தூர் ஓடைப்பட்டி அருகே நெடுஞ்சாலை ஒரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் எதிர் பாராதவிதமாக மோதியதில் சண்முகசுந்தரம் படுகாயமடைந்தார்.
அவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.