செய்திகள்
கீழ்கட்டளையில் ஓய்வு பெற்ற ஆசிரியை கார் மோதி பலி
கீழ்கட்டளையில் ஓய்வு பெற்ற ஆசிரியை கார் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
ஆலந்தூர்:
கீழ்கட்டளை அம்பாள் நகரை சேர்ந்தவர் நேபில் (75). ஓய்வு பெற்ற ஆசிரியை திருமணம் ஆகாதவர். இவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள நாய்களுக்கு தினமும் பிஸ்கெட் போடுவது வழக்கம்.
நேற்றும் நாய்களுக்கு பிஸ்கெட் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த கார் நேபில் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து பரங்கிமலை போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு வழக்குப் பதிவு செய்தார். கார் டிரைவர் பெயர் அன்பழகன். அரியலூரை சேர்ந்தவர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #accident