செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே தாய்-மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி கைது

Published On 2018-09-28 12:23 GMT   |   Update On 2018-09-28 12:23 GMT
ஆண்டிப்பட்டி அருகே தாய், மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சுந்தர்ராஜபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 42). இவருக்கும் மணிமேகலை (40) என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஷாலினி (12) என்ற மகள் உள்ளார்.

கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த முத்துச்சாமி அழகம்மாள் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அழகம்மாள் மற்றும் முத்துச்சாமி ஆகியோர் மணிமேகலை வீட்டுக்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

இது குறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் மணிமேகலை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முத்துச்சாமி மற்றும் அழகம்மாளை கைது செய்தனர்.

Tags:    

Similar News