செய்திகள்

பண்ருட்டியில் பிளஸ்-2 மாணவி மாயம்

Published On 2018-09-27 18:34 IST   |   Update On 2018-09-27 18:34:00 IST
பண்ருட்டியில் பிளஸ்-2 மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
பண்ருட்டி:

பண்ருட்டி லிங்க்ரோடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி காமாட்சி. இவர்களது மகள் மாரிமுத்து (வயது 16). இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

தற்போது காலாண்டு விடுமுறையையொட்டி அந்த தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடந்து வருகிறது. நேற்று காலை சிறப்பு வகுப்புக்கு செல்வதற்காக மாரிமுத்து வீட்டில் இருந்து சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் மாரிமுத்துவை தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இது குறித்து மாரிமுத்துவின் தாய் காமாட்சி பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் விஷ்ணுபிரியா வழக்குபதிவு செய்து மாயமான மாரிமுத்துவை தேடி வருகிறார்.
Tags:    

Similar News