செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் மழை - இடி விழுந்து செல்போன் டவர் தீப்பிடித்து எரிந்தது

Published On 2018-09-27 11:36 GMT   |   Update On 2018-09-27 11:36 GMT
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் பலத்த மழையின்போது செல்போன் டவர் மீது இடி விழுந்ததில் டவர் தீப்பிடித்து எரிந்தது.
புஞ்சை புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இடி-மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்று 4-வது நாளாக தொடர்ந்து மழை கொட்டியது. ஈரோடு நகரை தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.

புஞ்சை புளியம்பட்டியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இடியும்-மின்னலும் அதிகமாக இருந்தது. இதில் புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் மீது ‘இடி’ விழுந்தது.

இதில் அந்த செல்போன் டவர் திடீரென தீ பிடித்து எரிந்தது. அதிகாலை 1.30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது மழையும் பெய்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

தக்க சமயத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்ததால் அருகே உள்ள மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
Tags:    

Similar News