செய்திகள்

பெரியார் சிலையை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-26 10:41 GMT   |   Update On 2018-09-26 10:41 GMT
ஈரோடு அருகே பெரியார் சிலைகளை அவமதிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.க. மண்டல தலைவர் பிரகலாதன் தலைமை தாங்கினார்.

பெரியார் சிலைகளை அவமதிப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் அவர்களை கைது செய்ய வேண்டும். கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், தி.க. மண்டல அமைப்பு செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News