செய்திகள்

ஆரணியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Published On 2018-09-25 22:30 IST   |   Update On 2018-09-25 22:31:00 IST
ஆரணியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாலுகா அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணிக்கு தாசில்தார் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
ஆரணி:

ஆரணியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாலுகா அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணிக்கு தாசில்தார் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு முன்னிலை வகித்தார். தேர்தல் உதவி தாசில்தார் துரை.பழனிவேல் வரவேற்றார். இதில் டாக்டர் எம்.ஜி.ஆர்.சொக்கலிங்கம் கலைக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சென்றனர்.

தாலுகா அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி கோட்டை தெரு, பழைய, புதிய பஸ் நிலையங்கள், காந்திரோடு, கார்த்திகேயன் ரோடு, நகராட்சி சாலை வழியாக சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News