செய்திகள்

கடலூர் அருகே விபத்து- லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் மரணம்

Published On 2018-09-25 10:08 GMT   |   Update On 2018-09-25 10:08 GMT
கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:

விழுப்புரம் வடபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மகன் சீனுவாசன்(வயது 25). இவர் இன்று காலை 11 மணியளவில் கடலூரை அடுத்த கூத்தப்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சீனுவாசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் அவர் தலைமீது ஏறியது. இதில் சீனுவாசன் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த சீனுவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News