செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே வைகையாற்றில் மணல் திருடிய கும்பல் கைது

Published On 2018-09-25 10:03 GMT   |   Update On 2018-09-25 10:03 GMT
ஆண்டிப்பட்டி அருகே வைகையாற்றில் மணல் திருடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள க.விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அமச்சியாபுரம் பகுதியில் டிராக்டரில் 2 பேர் மணல் திருடிச்சென்றனர்.

போலீசார் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் டிராக்டருடன் மணலை பறிமுதல் செய்து அதனை ஓட்டி சென்ற ராஜேஸ்வரன் (36) என்வரை கைது செய்தனர். தப்பி ஓடிய பூபாலன் என்பவரை தேடி வருகின்றனர்.

இதேபோல் ஆத்தங்கரைபட்டி பகுதியில் வைகை ஆற்று படுகையில் இருந்து மணல் அள்ளி சென்ற செல்லாண்டி என்பவரை ராஜதானி போலீசார் கைது செய்தனர்.

கரட்டுப்பட்டி பகுதியில் சாக்கு மூட்டையில் மோட்டார் சைக்கிளில் மணல் திருடி சென்ற பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News