செய்திகள்

திண்டுக்கல் அருகே மின் கம்பத்தில் பைக் மோதி டெய்லர் பலி

Published On 2018-09-24 10:42 GMT   |   Update On 2018-09-24 10:42 GMT
திண்டுக்கல் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டெய்லர் பலியானார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் பிரகாஷ் (வயது 26). பேகம்பூரில் உள்ள கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த நண்பர் மோகன்ராஜ் (19) பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

அக்கரைபட்டி பகுதியில் வந்த போது சாலை ஓரம் உள்ள மின்கம்பத்தில் பயங்கரமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரகாஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பிரகாஷ் இறந்தார். லேசான காயத்துடன் மோகன்ராஜ் உயிர் தப்பினார்.

இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News