செய்திகள்

மாங்காடு, வண்ணாரப்பேட்டையில் 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

Published On 2018-09-24 08:42 GMT   |   Update On 2018-09-24 08:42 GMT
மாங்காடு மற்றும் வண்ணாரப்பேட்டையில் 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:

மாங்காடை அடுத்த அம்பாள்நகர் பாலாஜி அவென்யூவில் வசித்து வருபவர் ரமேஷ். பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 13-ந் தேதி இவரது மனைவியும், குழந்தைகளும் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்று விட்டனர். கடந்த 21-ந் தேதி ரமேசும் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 32 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடி சென்றிருப்பது தெரிந்தது. இது குறித்து மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

மாங்காடை அடுத்த கோவூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், சாப்ட்வேர் என்ஜினீயர். கடந்த 22-ந் தேதி அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு சென்றார்.

இன்று காலை திரும்பி வந்த போது கழிவறையின் ஜன்னல் உடைந்து கிடந்தது. அதன் வழியாக புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் பணத்தை சுருட்டிச் சென்று விட்டனர்.

பழைய வண்ணாரப்பேட்டை, பாலசுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் சலீம், டெய்லர். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார்.

மாலையில் திரும்பி வந்த போது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ. 22 ஆயிரம் ரொக்கம், 12 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தனர். #tamilnews
Tags:    

Similar News