செய்திகள்

மன்னார்குடி அருகே இன்று அதிகாலை வீட்டு சுவர் இடிந்து முதியவர் பலி

Published On 2018-09-24 12:08 IST   |   Update On 2018-09-24 12:08:00 IST
மன்னார்குடி அருகே இன்று அதிகாலை வீட்டு சுவர் இடிந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#Death

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதிமங்கலம் அரிவளூர் காலனி தெருவை சேர்ந்தவர் எலரா (வயது52). இவர் தனது மகன் மகேஷ்(25) மற்றும் பேரன் மணிகண்டன்(4) ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பு பக்கம் உள்ள சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த 3 பேர் மீதும் திடீரென விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கி எலரா உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்.

சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது எலரா பலியாகி கிடப்பதையும், படுகாயம் அடைந்து மணிகண்டன் மற்றும் மகேஷ் ஆகியோர் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே மணிகண்டன், மகேஷ் ஆகியோரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Death

Tags:    

Similar News