செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது

Published On 2018-09-23 13:49 GMT   |   Update On 2018-09-23 13:49 GMT
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது.

மேட்டூர்:

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 6 ஆயிரத்து 608 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 6 ஆயிரத்து 99 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மொத்தம் 22 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர் திறப்பை விட தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தினமும் 1 அடி குறைந்து வருகிறது. நேற்று 107.79 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 106.73 அடியாக குறைந்தது.

நீர்வரத்து குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் சரிவதற்கான வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News