செய்திகள்

பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2018-09-22 23:10 GMT   |   Update On 2018-09-22 23:10 GMT
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் நாளை முதல் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை காலை 4.40, 5.30 மணிக்கு புறப்படும் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 5.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News