தாம்பரம் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு - 2 பேர் பிடிபட்டனர்
சென்னை:
சென்னை அண்ணாநகர் எல்.ஐ.சி. பீமாஜீவன் காலனியைச் சேர்ந்தவர் அனித் மேத்யூ (வயது 61) இவருக்கு சொந்தமான 4,800 சதுரஅடி நிலம் தாம்பரம் அருகே சுண்ணாம்பு கொளத்தூர் என்ற இடத்தில் உள்ளது.
இந்த நிலத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்து சொந்தம் கொண்டாடினார்கள். இதுபற்றி அனித் மேத்யூ மத்திய குற்றப்பிரிவு போலீசில் நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் கொளத்தூரைச் சேர்ந்த காளிதாஸ், வேளச்சேரியை சேர்ந்த ராஜா என்ற ராஜசேகர் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான வேளச்சேரி ராஜா 177-வது வட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ஆவார். இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.