செய்திகள்

வையம்பட்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண் பிணம்

Published On 2018-09-21 12:31 GMT   |   Update On 2018-09-21 12:31 GMT
வையம்பட்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மணப்பாறை:

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ரெயில் நிலையத்தின் அருகே உள்ள தண்டவாளத்தில் இன்று காலை பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு பிணமாக  கிடந்தார். 

இது குறித்து தகவல் அறிந்ததும் திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். மஞ்சள் கலர் சட்டையும், கைலியும் அணிந்து உள்ளார். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News