செய்திகள்

தாழம்பூரில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலி

Published On 2018-09-21 08:23 GMT   |   Update On 2018-09-21 08:23 GMT
தாழம்பூரில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

திருப்போரூர்:

மறைமலைநகர் பகுதியைச்சேர்ந்தவர் சேது ராமன்(வயது 39). சிறு சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு அவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். தாழம்பூர் கூட்டு ரோடு சாலையில் வந்த போது அவ்வழியே சென்ற தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

Tags:    

Similar News