செய்திகள்

ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.1.20 லட்சத்தை பறித்து சென்ற வாலிபர் கைது

Published On 2018-09-19 13:28 GMT   |   Update On 2018-09-19 13:28 GMT
திருச்சியில் ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.1.20 லட்சத்தை வாலிபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி:

திருச்சி ஆனந்தபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 55). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு தனியார் டவுன் பஸ்சில் சென்றார். அப்போது அவர் பையில்  ரூ.1.20 லட்சத்தை வைத்திருந்தார். அதனை பஸ்சில் பயணித்த வாலிபர் ஒருவர் நோட்டமிட்டுள்ளார். 

இந்த நிலையில் பாலக்கரை ரவுண்டானா அருகே செல்லும் போது திடீரென அந்த வாலிபர், வடிவேல் வைத்திருந்த பையை  பறித்துக்கொண்டு, பஸ்சில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். பணத்தை பறிகொடுத்த வடிவேல் இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில் பணத்தை பறித்து சென்றது  பாலக்கரை கீழப்புதூர் ரோடு பகுதியை சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூ.1.20 லட்சத்தை  பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News