செய்திகள்

மதுரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்

Published On 2018-09-17 11:16 GMT   |   Update On 2018-09-17 11:16 GMT
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென்று மாயமானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

பேரையூர்:

மதுரை அருகே உள்ள நல்லூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் பாத்தையா. இவரது மகள் காளீஸ்வரி (வயது21). இவருக்கும், பாறப்பட்டியைச் சேர்ந்த பூசாரி மகன் சின்னபூசாரி (24) என்பவருக்கும், கடந்த 11-ந்தேதி திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது. அன்று இரவு மணமகன் வீட்டின் அருகே உள்ள வீட்டில் காளீஸ்வரி தங்கி இருந்தார்.

இந்த நிலையில் அதிகாலையில் திடீரென்று அவரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரியின் பெற்றோர் மற்றும் மணமகனின் உறவினர்கள் அந்த பகுதியில் காளீஸ்வரியை தேடினர். பலன் இல்லை.

எனவே திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காளீஸ்வரியை தேடி வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News