செய்திகள்

வீரவநல்லூரில் பைக் மோதி விவசாயி பலி

Published On 2018-09-15 19:07 IST   |   Update On 2018-09-15 19:07:00 IST
நடந்து சென்ற விவசாயி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 62), விவசாயி. இவர் அங்கு சாலை ஓரம் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News