செய்திகள்

காதலித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு- வாலிபர் கைது

Published On 2018-09-15 13:29 GMT   |   Update On 2018-09-15 13:29 GMT
விளாத்திகுளம் அருகே இளம்பெண்ணிடம் நெருங்கி பழகி திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே சக்கம்மாள் புரத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகள் ரமேஷ் காந்தி (27). இவரது உறவினர் புதிய புத்தூரைச் சேர்ந்த மதுரைவீரன் மகன் ரமேஷ் (26). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு ரமேஷ் காந்தியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரமேஷ் நெருங்கி பழகி உள்ளார்.

அதன் பின்னர் அவர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். பலமுறை திருமணத்துக்கு வற்புறுத்தியும் அவர் மறுத்ததால், ரமேஷ் மீது விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரமேஷ் காந்தி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தார்.
Tags:    

Similar News