செய்திகள்

விருத்தாசலம் அருகே வி‌ஷ வண்டுகள் கடித்து 12 பேர் காயம்

Published On 2018-09-15 12:21 GMT   |   Update On 2018-09-15 12:21 GMT
வி‌ஷ வண்டுகள் கடித்ததில் 12 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விருத்தாசலம்:

காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவரது இல்ல காதணி விழா விருத்தாசலம் அருகே கம்மாபுரம் சி.கீரனூரில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்து வழங்கும் வகையில் அந்த பகுதியில் உள்ள மரத்தடியில் வைத்து சமையல் செய்தனர். அப்போது அங்கிருந்து வந்த புகையால், மரத்தில் இருந்த வி‌ஷவண்டுகள் கலைந்து, அங்கிருந்தவர்களை கடித்தன.

இதில் பிச்சமுத்து, பாக்கியராஜ், ராஜேசேகர், ராமலிங்கம், பழனியம்மாள், சங்கீதா, சேகர், ரேகா, பச்சமுத்து, உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News