செய்திகள்

பேரணாம்பட்டில் குழந்தை பிரசவித்த பெண் திடீர் மரணம்

Published On 2018-09-15 15:31 IST   |   Update On 2018-09-15 15:31:00 IST
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் குழந்தை பிரசவித்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராகதேவன் (26). செங்கல் சூளை தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவர் மகள் சங்கீதாவும் (23) காதலித்து 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் கர்ப்பமான சங்கீதாவுக்கு கடந்த 4-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. 10-ந் தேதி கணவன் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார். இந்த நிலையில் சங்கீதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சங்கீதா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து, பேரணாம்பட்டு போலீசில் இளம்பெண்ணின் தந்தை ரவி புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலு வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் இறந்துவிட்டதால் பிஞ்சுக்குழந்தை ஆதரவின்றி தவிக்கிறது. இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News