என் மலர்
நீங்கள் தேடியது "பேரணாம்பட்டில் பெண் மரணம்"
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் குழந்தை பிரசவித்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராகதேவன் (26). செங்கல் சூளை தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவர் மகள் சங்கீதாவும் (23) காதலித்து 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் கர்ப்பமான சங்கீதாவுக்கு கடந்த 4-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. 10-ந் தேதி கணவன் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார். இந்த நிலையில் சங்கீதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சங்கீதா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து, பேரணாம்பட்டு போலீசில் இளம்பெண்ணின் தந்தை ரவி புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலு வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் இறந்துவிட்டதால் பிஞ்சுக்குழந்தை ஆதரவின்றி தவிக்கிறது. இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேரணாம்பட்டு பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராகதேவன் (26). செங்கல் சூளை தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவர் மகள் சங்கீதாவும் (23) காதலித்து 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் கர்ப்பமான சங்கீதாவுக்கு கடந்த 4-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. 10-ந் தேதி கணவன் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார். இந்த நிலையில் சங்கீதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சங்கீதா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து, பேரணாம்பட்டு போலீசில் இளம்பெண்ணின் தந்தை ரவி புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலு வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் இறந்துவிட்டதால் பிஞ்சுக்குழந்தை ஆதரவின்றி தவிக்கிறது. இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






