செய்திகள்

கடையை அடைக்கும்படி மிரட்டல் - தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கைது

Published On 2018-09-14 23:28 IST   |   Update On 2018-09-14 23:28:00 IST
கடையை அடைக்குமாறு மிரட்டல் விடுத்ததால் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்போது நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பர்னிச்சர் கடை திறந்து இருந்தது. அந்த கடையை அடைக்குமாறு தி.மு.க.வினர் மிரட்டல் விடுத்தனர்.

எனவே கடையை அடைக்கச்சொல்லி மிரட்டியதாக கடையின் உரிமையாளர் பிரவீன் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டார் போலீசார் தி.மு.க.வினர் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் 19 பேரில் ஒருவரான தி.மு.க. இளைஞரணி நிர்வாகியான கோதை கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 18 பேரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News