செய்திகள்

தருமபுரி அருகே மணல் திருடிய லாரி டிரைவர் கைது

Published On 2018-09-14 11:49 GMT   |   Update On 2018-09-14 11:49 GMT
தருமபுரி அருகே மணல் திருடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் லாரியில் இருந்த மணல் உரிய அனுமதியில்லாமல் திருடிவந்த மணல் என தெரியவந்தது.

இதுகுறித்து லாரி ஓட்டுநரை விசாரணை செய்ததில்  அவரது பெயர் கிருஷ்ணன் வயது (23) கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள கொப்பக்கரையை சேர்ந்தவர் என தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் மணல் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டதுடன் லாரி உரிமையாளர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News