செய்திகள்

தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம்- உண்ணாவிரதம்

Published On 2018-09-14 10:51 GMT   |   Update On 2018-09-14 10:51 GMT
ஏரிப்பாக்கம் தனியார் தொழிற்சாலை தொழிலாளர் மற்றும் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்ட 4-வது காலகட்ட நீண்டகால புதிய உயர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

2002-ல் ஏற்படுத்தப்பட்ட நிலையான சட்டத்தை தொழிலாளர்களுக்கு எதிரான விதிகளை நீக்கி புதிய நிலையான சட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.ஒப்பந்த தொழிலாளர்களின் மாத ஊதியத்தை குறைந்தபட்சம் ரூ 18 ஆயிரம் என்று உயர்த்தி வழங்க வேண்டும்.

3 ஆண்டுகள் பணி முடித்திருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை சுதேசி மில் அருகில் ஏரிப்பாக்கம் தனியார் தொழிற்சாலை தொழிலாளர், ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தங்களது கோரிக்கைகளை புதுவை அரசும் தொழிலாளர் துறையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். #tamilnews
Tags:    

Similar News