நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த முதணை கிராமம் தென்குந்தன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). தொழிலாளி.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஊ.மங்களம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்தம்பி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சுரேஷ் வயிற்று வலி காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.