செய்திகள்

நாகர்கோவிலில் 9-ம் வகுப்பு மாணவி கடத்தல்- வாலிபர் மீது வழக்கு

Published On 2018-09-08 15:56 GMT   |   Update On 2018-09-08 15:56 GMT
வீட்டில் இருந்த 9-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கீழ மறவன் குடியிருப்பு சிவன்கோவில் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.

நேற்று காலை வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் மாணவியின் தந்தை புகார் செய்தார்.  புகாரில் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 21) என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து என் மகளை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்று விட்டார். அவரிடம் இருந்து எனது மகளை மீட்டுத் தரவேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக் டர் சாந்தாகுமாரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். ராஜா மீது கடத்தல் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

செல்போன் டவர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் எங்கு இருக்கிறார் கள் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்களை பிடிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
Tags:    

Similar News