என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kidnapped 9th class student
நீங்கள் தேடியது "kidnapped 9th class student"
வீட்டில் இருந்த 9-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கீழ மறவன் குடியிருப்பு சிவன்கோவில் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.
நேற்று காலை வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் மாணவியின் தந்தை புகார் செய்தார். புகாரில் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 21) என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து என் மகளை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்று விட்டார். அவரிடம் இருந்து எனது மகளை மீட்டுத் தரவேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக் டர் சாந்தாகுமாரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். ராஜா மீது கடத்தல் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
செல்போன் டவர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் எங்கு இருக்கிறார் கள் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்களை பிடிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X