செய்திகள்

அரசு டவுன் பஸ்சில் மாணவிகளிடம் ‘சில்மி‌ஷம்’ செய்த கண்டக்டர்

Published On 2018-09-08 11:16 IST   |   Update On 2018-09-08 11:16:00 IST
சென்னிமழை அருகே அரசு டவுன் பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டரை மாணவிகளே போலீசில் ஓப்படைத்தனர்.
சென்னிமலை:

சென்னிமலையில் இருந்து தடம் எண் சி-8 அரசு டவுன் பஸ் எழுமாத்தூர் அரசு கல்லூரி வரை தினமும் சென்று வருகிறது.சென்னிமலை பகுதியில் இருந்து 20 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தினமும் இலவச பஸ் பாஸ் மூலம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் இந்த பஸ்சில் கண்டக்டராக பணியாற்றும் துடுப்பதி கல்லாகுளத்தை சேர்ந்த அம்மாசை என்பவர் மகன் அய்யப்பன் (31) கல்லூரி மாணவிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தாராம். தொடர்ந்து இதுபோலவே கல்லூரி மாணவிகளின் மீது மோதுவது, அவர்களின் காது அருகே வந்து சினிமா பாட்டு பாடுவது என தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை பஸ்சில் கூட்டம் இல்லாத போதும் வழக்கம் போல மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்துள்ளார். இதனால் வெகுண்டு எழுந்த மாணவிகள் கண்டக்டர் அய்யப்பனை பிடித்து சென்னிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவிகளின் புகாரின் பேரில் அய்யப்பனிடம் சென்னிமலை இன்ஸ்பெக்டர் சுகவனம் (பொறுப்பு) விசாரணை மேற்கொண்டார். அரசு கண்டக்டருக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினரும், போக்குவரத்து கழக அதிகாரிகளும் மாணவிகளிடம் சமரச முயற்சி மேற்கொண்டனர்.

ஆனாலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் இதனை ஏற்க மறுத்து உறுதியுடன் இருந்தனர். இதனால் இரவு 10 மணிக்கு மேல் கண்டக்டர் அய்யப்பன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டார். இன்று காலை கொடுமுடி நீதிமன்றத்தில் அய்யப்பன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
Tags:    

Similar News