செய்திகள்

இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதிதிட்டத்துக்கு உதவியதாக மேலும் ஒரு வாலிபர் கைது

Published On 2018-09-07 10:28 GMT   |   Update On 2018-09-07 10:28 GMT
இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய சதிதிட்டத்துக்கு உதவியதாக மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய சதிதிட்டத்துடன் கோவை வந்த 5 பேரை கடந்த 1-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.

கைதான திண்டிவனம் இஸ்மாயில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, பல்லாவரம் சம்சுதீன், ஒட்டேரி சலாவு தீன் மற்றும் கோவை என்.எச். ரோடு ஆசிக் ஆகிய 5 பேர் மீதும் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் (யு.ஏ.பி.ஏ.) வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் சதி திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பைசல் (28), குனியமுத்தூரை சேர்ந்த அன்வர்(25) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பைசலை கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த அன்வரின் செல்போன் எண் மூலம் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று அவரை மடக்கிப் பிடித்தனர்.

தனது நண்பரான ஆசிக் கேட்டுக் கொண்டதால் சதி திட்டத்துக்கு உதவி செய்ய ஒப்புக் கொண்டதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இவ்வழக்கில் கைதான ஆசிக் பள்ளிப்படிப்பை கோத்தகிரியில் படித்துள்ளார். அங்கு இவருக்கு ஏராளமான நண்பர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்கள் யார்-யார்? ஆசிக்குடன் அவர்கள் எந்தெந்த வகையில் தொடர்பில் இருந்தார்கள்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News