செய்திகள்

சிறுகனூர் அருகே கார் மோதி விவசாயி பலி- டிரைவர் கைது

Published On 2018-09-06 13:11 GMT   |   Update On 2018-09-06 13:11 GMT
சிறுகனூர் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே உடல் நகுங்கி பலியானார்.
மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டம் சிறுகனூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). விவசாயி. இவர் இன்று காலை சொந்த வேலை காரணமாக கொணலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பினார்.சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சிறுகனூர் பிரிவு ரோட்டில் நடந்து சென்ற போது, சென்னையில் இருந்து  திருச்சி நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக கனகராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீசார் விரைந்து சென்று கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுகனூர்  போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவர் அஸ்வினை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News