செய்திகள்

படிப்பு செலவுக்காக விவசாய கூலி வேலைக்கு வந்த நர்சிங் மாணவி பாம்பு கடித்து பலி

Published On 2018-09-06 12:18 GMT   |   Update On 2018-09-06 12:18 GMT
தாராபுரம் அருகே படிப்பு செலவுக்காக விவசாய கூலி வேலைக்கு வந்த நர்சிங் மாணவி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரம்:

திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் ஏராளமானோர் வந்து தங்கி விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகள் சரஸ்வதி (வயது 23). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

படிப்பு செலவுக்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு 80 கி.மீட்டர் தூரமுள்ள தாராபுரம் அலங்கியம் பகுதிக்கு அந்த ஊரை சேர்ந்த பெண்களுடன் வேனில் விவசாய கூலி வேலைக்கு வந்தார். 4 நாட்களாக சின்ன வெங்காய அறுவடை வேலை செய்தார். வேலை முடிந்ததும் தோட்ட உரிமையாளர் ஒதுக்கி கொடுத்த ஒரு குடிசையில் தூங்கினார்.

சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து தூங்கிய போது சரஸ்வதியின் காலில் பாம்பு கடித்தது. அதிர்ச்சியடைந்த மற்ற பெண்கள் அவரை நாட்டு வைத்தியரிடம் அழைத்துச்சென்றனர். அங்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. இருந்தாலும் நிலைமை மோசமடைந்தது.

இதனையடுத்து சரஸ்வதியை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

குண்டம் அருகே வந்தபோது வரும் வழியிலேயே நர்சிங் மாணவி சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News