செய்திகள்

திருவெண்காடு அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

Published On 2018-09-05 10:18 GMT   |   Update On 2018-09-05 10:18 GMT
திருவெண்காடு அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

நாகை மாவட்டம் திருவெண்காடு அடுத்த சிறுவாளி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணகி (வயது 40). இவர் நேற்று தனது உறவினரான நந்தினி (20) என்ற இளம்பெண்ணுடன் மொபட்டில் திருவெண்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். வண்டியை நந்தினி ஓட்டி சென்றார்.

அப்போது நாங்கூர் முக்கூட்டு என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக சென்ற நெல் அரவை எந்திரம் ஏற்றிச்சென்ற லாரியை நந்தினி முந்தி சென்றார். அந்த சமயத்தில் எதிரே லோடு ஆட்டோ வந்ததால் திடீரென அவர் பிரேக் பிடித்தார்.இதில் வண்டியின் பின்னால் இருந்த கண்ணகி தூக்கி வீசப்பட்டு லாரியின் பின்சக்கரத்தில் சிக்கினார். இதில் அவரது இடுப்பு, கை, கால் நசுங்கியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை சிசிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணகி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News