செய்திகள்
மதுரையில் பிளஸ்-1 மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
மதுரையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை ஜவகர்புரம் முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 16), பிளஸ்-1 மாணவி.
கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா, காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் பள்ளி செல்லவில்லை. இது அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் ஐஸ்வர்யா, தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது தாயார் ராஜேஸ்வரி, தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர்யா எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஜவகர்புரம் முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 16), பிளஸ்-1 மாணவி.
கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா, காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் பள்ளி செல்லவில்லை. இது அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் ஐஸ்வர்யா, தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது தாயார் ராஜேஸ்வரி, தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர்யா எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.