செய்திகள்

உளவுப்பிரிவு ஏட்டுக்கு அடி, உதை- ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2018-09-04 10:18 GMT   |   Update On 2018-09-04 10:18 GMT
சேலத்தில் உளவுப்பிரிவு ஏட்டு வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:

சேலம் சூரமங்கலம் காசக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 47). இவர், சேலம் மாநகர காவல் துறையில் சூரமங்கலம் பகுதி நுண்ணறிவுப்பிரிவு (ஐ.எஸ்) ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

இன்று காலையில் ஏட்டு நடராஜன் வீட்டில் இருந்தார். அப்போது, 2 பேர் அங்கு வந்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் கை, கால்களில் பலத்த காயம் அடைந்த நடராஜன் நேராக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவருக்கு டாக்டர்கள், அடிப்பட்ட இடத்தில் மருந்துகள் வைத்து சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து நடராஜன் வீட்டிற்கு திரும்பினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் போலீஸ் ஏட்டை தாக்கியவர்கள் அவரது உறவினர்கள் என்றும், குடும்ப தகராறு காரணமாக தாக்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உளவுப்பிரிவு ஏட்டு வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News